சிபிஎம் தலைவர்கள் இன்றைய பிரச்சாரம்
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
திருவள்ளூர் (ஆவடி)
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
வடசென்னை
(திருவெற்றியூர்-எர்ணாவூர்)
உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர்
திருச்சிராப்பள்ளி
டி.கே.ரங்கராஜன்
மூத்த தலைவர் - சிபிஐ(எம்)
திண்டுக்கல்
துரை தயாநிதியிடம் முதல்வர் நலம் விசாரிப்பு
வேலூர், ஏப்.2- முதல்வர் மு.க. ஸ்டாலினின் மூத்த சகோதர் மு.க. அழ கிரியின் மகன் துரை தயாநிதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவ மனையில் கடந்த ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற் காக சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர், துரை தயாநிதியைச் சந்தித்து நலம் விசா ரித்தனர். அப்போது அமைச்சர் துரைமுரு கன் உடனிருந்தார்.
மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.1,487 கோடி நிவாரணம் நீதிமன்றத்தில் அரசு தகவல்
சென்னை, ஏப்.2- மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிவா ரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, “மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட சுமார் 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு, கடந்த ஜனவரி வரை, தலா ரூ. 6 ஆயிரம் வீதம் ரூ. ஆயிரத்து 455 கோடியே 20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
ஒன்றிய அரசு இதுவரை நிவாரணத் தொகையை வழங்காத நிலையில் ரூ. 1,487 கோடியையும் தமிழ்நாடு அரசே வழங் கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
திமுக கூட்டணிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு
சென்னை, ஏப்.2- தமிழகத்தில் திமுக தலை மையிலான ‘இந்தியா’ கூட்ட ணிக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின், சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், வகுப்புவாதிகள் மீண்டும் ஒன் றிய ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு எதிரான வலி மையான கூட்டணிக்கு வாக்க ளிக்க வேண்டும் என்ற அடிப்ப டையில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை மையில் அமைந்துள்ள ‘இந் தியா’ கூட்டணிக்கு வாக்களிப் பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அமைப்பின் தலைவர் மெளலவி ஹனீபா மன்பயீ தெரிவித்துள்ளார்.