புதுமை தொழில்நுட்ப போட்டி இறுதி போட்டியாளர்கள் அறிவிப்பு
சென்னை, ஜூன் 11- இளைஞர்களிடம் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வரும் விவோ இக்னைட் போட்டியின் மூன்றாவது பதிப்புக்கான இறுதி போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விவோ இந்தியா ஸ்மார்ட்போன், அதன் விவோ இக்னைட் தொழில்நுட்ப போட்டிக்கான முதல் 10 யோசனைகளை அறிவித்துள்ளது. இந்த சிறந்த திட்ட யோசனைகள் 5,600 க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் வளமான பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன. 660க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பள்ளிகளின் பங்கேற்புடன், இந்த ஆண்டு இறுதிப் போட்டி நடைபெற்றது. கிட்டத்தட்ட 200 பட்டியலிடப்பட்ட யோசனைகளில், மாற்றத்தை ஏற்படுத்தும் 10 கண்டுபிடிப்புகள் தனித்துநின்றன. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 திட்டங்கள் காலநிலை நடவடிக்கை முதல் உள்ளடக்கிய சுகாதாரம் மற்றும் கிராமப்புற அணுகல் வரை நிஜ உலக சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. ரோபோ உதவியுடன் கணைய அறுவை சிகிச்சை திட்டம் சென்னை, ஜுன் 11- இரைப்பை குடலியல் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையில் புதிய தரஅளவுகோலை நிறுவும் விதத்தில் அப்போலோ புற்றுநோய் மையம், ரோபோ உதவியுடன் கூடிய கணைய அறுவைசிகிச்சைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரைப்பை குடல் சார்ந்த புற்றுநோய்களில் அதிக சிக்கலான, அதிக இடர்வாய்ப்பு உள்ள அறுவை சிகிச்சைக்கு இது பயன்படுத்தப்படும் என்று மையத்தின் முதுநிலை மருத்துவ நிபுணர் வெங்கட் கூறினார். பின்னர் நோயாளிகள் பலரும் சிக்கல்கள் எதுவுமின்றி, நான்கு நாட்களுக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வசதியை பயன்படுத்தி மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். பிரியா கபூர் கூறினார். சத்தமின்றி கொல்லும் நோய் என அழைக்கப்படும் கணையப் புற்றுநோய், ஆரம்ப நிலைகளில் அறிகுறிகள் இல்லாத நோயாகவே பொதுவாக இருக்கிறது. மஞ்சள் காமாலை போன்றவற்றின் அறிகுறிகள் வெளிப்பட்டதற்குப் பிறகே இது உறுதி செய்யப்படுகிறது. ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் வழியாக, அறுவை சிகிச்சைகள் துல்லியமாக நடைபெறுகின்றன. இதனால் நோயாளிகள் விரைந்து குணமடைவதாகவும் மருத்துவர் வெங்கட் கூறினார். விவோ புதியபோன் அறிமுகம் சென்னை, ஜூன் 11- விவோ, சோனி ஐஎம்எக்ஸ் 921 பின்புற கேமரா சென்சாருடன் கூடிய முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது . விவோ T4 அல்ட்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போன் மூன்று கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்க உதவுகிறது. இதில் 50 MP சோனி 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா அதிநவீன சாதனங்களில் ஒன்றாகும். எடுக்கும் புகைப்படத்தை 100 மடங்கு பெரிதுபடுத்தி எடுக்கமுடியும். இந்த செல்போன் அன்றாட பணிகளை நெறிப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் பலசிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த போன் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது கடலூர், ஜூன் 11- கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாமூர் மலட்டாறு பாலம் அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்த உளுந்தூர்பேட்டை அருகே சோமாச்சிபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெகதீஷ் (19) கைது செய்யப்பட்டார். கைதான ஜெகதீஷ் மீது திருநாவலூர் போலீசு நிலையத்தில் மூன்று கஞ்சா வழக்கு கள் பதிவாகியுள்ளன. இவரது தொடர்ச்சியான குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்தும் வகையில், காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்தார். இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெகதீஷிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி மூன்று பேர் பலி கடலூர், ஜூன் 11- விருதாச்சலம் அருகே பாதயாத்திரையாக சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமம் அருகே உள்ள புனித அந்தோணி யார் ஆலயத்திற்கு ஏராளமான மக்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். புதன்கிழமை (ஜூன் 11) அதிகாலை விருதாச்சலம் சித்தலூர் ரயில்வே மேம்பாலம் அருகே புனித அந்தோணியார் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது கார் மோதியது. இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெபி எனப்படும் சகாயமேரி (18), ஸ்டெல்லா மேரி (40), இருதயசாமி (50) ஆகிய மூவர் பலியானார்கள். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மூவரின் உடல்களும் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேரில் ஆனந்தி என்பவர் தீவிர நிலையில் இருப்ப தால் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச் சைக்காக கொண்டு செல்லப்பட்டார். விருதாச்சலம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.