சென்னை,ஜூலை 22- தமிழகத்தில் முதல்முறையாக கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22 அன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கட்டடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகிய வற்றின் அடிப்படையில், தகுந்த உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊர மைப்பு இயக்ககம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம் டிஏ) ஆகியவை வழங்கி வருகின்றன.
ஏற்கெனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டட அனு மதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக் கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண் ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஊராட்சிகளில் கட்டட அனு மதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டது.
இதையொட்டி பல்வேறு சலுகை களையும் தமிழக அரசு அறிவித்தது. தளப்பரப்பு குறியீட்டிலும், பணி முடிப்பு சான்றிதழ் பெறுவதிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் ‘2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டு மானத்துக்கு கட்டட அனுமதி தேவை யில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை’ என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பை செயல்படு த்தும் வகையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்கத் தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறை யாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணையதளம் (ஆன்லைன்) வாயி லாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடி யிருப்பு கட்டுமானத்திற்கு உடனடி யாகக் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கி ணைந்த புதிய திட்டத்தை முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதில் 10 பயனாளிகளுக்கு கட்டு மான அனுமதி ஆணைகளை வழங்கி னார். இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக் கட்டணம் (சதுர மீட்டருக்கு 5.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக் கான கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாக கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கு வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதலிருந்து விலக்கு அளிக்கப்படு கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 4184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.382.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பல லட்சம் பேர் பயனடைவார்கள்
சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களி டம் கூறுகையில், “ இந்த திட்டம் மூலம் பல லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள். கட்டட அனுமதி கொடுப்பதில் இருந்த பல சிக்கல் களை தீர்த்துள்ளோம். அனுமதிக்காக விண்ணப்பிப்ப வர்களுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கட்டடம் கட்ட விண்ணப்பிக்கும் பயனாளிகள் காத்திருக்காமல் பணியை தொடங்கலாம். வீட்டு வசதித்துறை குடியிருப்புகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விற்பனையாகாத வீடுகளை வாடகைக்கு விடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் படி, www.onlineppa.tn.gov.in <http://www.onlineppa.tn.gov.in/> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டிய நிலையில் இருந்து நேரத்தை சேமிக்க முடியும்.