tamilnadu

கோவில் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உயர்வு

சென்னை,நவ.24- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வா கம் மற்றும் பராமரிப்பு செலவிற் காக அரசு மானியமாக ரூ.8 கோடி க்கான காசோலையை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார்.

இதே போல் ஒரு கால பூஜைத் திட்டம் கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன், மகள்கள் மேற்படிப்பிற் கான உயர் கல்வித் தொகையை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்க ளுக்கு அதற்கான வங்கி வரை வோலைகளையும் வழங்கினார்.

கோவில்கள் சார்பில் நடத்தப் படும் பயிற்சி பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாக வும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிர மாக உயர்த்தி 292 மாணவர்க ளுக்கு வழங்கிடும் அடையாள மாக 8 மாணவர்களுக்கு அதற் கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன்மூலம் முழு நேர பயிற்சி பெறும் 212 மாணவர்கள், பகுதி நேர பயிற்சி பெறும் 80 மாண வர்களும் என மொத்தம் 292 மாண வர்கள் பயன்பெறுவர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் முரளிதரன், கூடுதல் ஆணை யர் திருமகள், ஹரிப்ரியா ஆகி யோர் கலந்து கொண்டனர்.