tamilnadu

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, பிப்.23- மும்பையைத் தலை மையிடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் டிரேட் லிமிட் என்கிற தனியார் நிறு வனம் செயல்பட்டு வரு கிறது. அதன் கிளை நிறு வனங்கள் சென்னை, திருச்சி, டெல்லி, விசாகப் பட்டினம் உள்பட பல நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

மேலும் நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பரநிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படு கிறது. இந்த நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடு பட்டுள்ளதாக அமலாக்கத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளியன்று (பிப்.23)  காலை முதல் இந்த நிறு வனத்திற்குத் தொடர் புடைய இடங்களில் அம லாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

8 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதி காரிகள், சென்னை எழும்பூரில் உள்ள ஐ.டி.எல். நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்க ளில் சோதனை நடத்தி வரு கிறார்கள். இந்த சோதனை முடிந்த பின்னரே, மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படு கிறது.