tamilnadu

img

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்.... தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு....

சென்னை:

தமிழக அரசு ஞாயிறன்று மாலை வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்,தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது.     

தேசியபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடுமுழுவதும் பொதுஊரடங்குஉத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதியகட்டுப்பாடுகளுடன் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு, அதிகரித்துவரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பலநடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும்,சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத தாலும், நாளுக்குநாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்துவருவதால் முதலமைச்சர் ஏப்ரல் 18 அன்று  தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஏற்கனவேதடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கும் ஏப்ரல்  20 ஆம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு

$    மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4மணி முடிய இரவு நேர ஊரடங்குஅமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொதுபேருந்துபோக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. 

$  தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால்,வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்கு வரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

$  மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

$  எனினும், அவசர மருத்துவத் தேவை களுக்கும், விமானநிலையம் / இரயில்நிலையம் செல்லமட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போதுஅனுமதிக்கப்படும்.

$   ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

$   பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள்  தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

$   தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதிஅளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறு வனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும்பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

$ மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிகவளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள்செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.  இதைகடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

$   எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள்,  போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள்  ஆகியவைமுழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். 

$  முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில்,உணவகங்களில் காலை 6  மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல்மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, ஜூமாட்டோ போன்ற மின் வணிகம்மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது.  மற்ற மின்வணிக நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.

$  ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்.

$  தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள்  மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு  ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

$  முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள்உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம்/திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவேவெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் எந்தவிதமான தடையு மில்லை. 

சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை

$ நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடுபோன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

$   தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

$   பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள்மற்றும் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

$  தகவல்  தொழில்நுட்பம்  மற்றும் தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத  பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

$   நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி)ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன்,இரவு 9 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

தொடர்ச்சி 5ம் பக்கம்...

;