tamilnadu

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை,ஜன.13- ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  போக்குவரத்து துறை அமைச்சர்  எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள் ளார்.

சென்னை கிளாம்பாக்கம் மற்றும்  கோயம்பேடு பேருந்து நிலையங் களையும், பேருந்துகளின் செயல் பாடுகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.  அதைத் தொடர்ந்து பயணிகளிடம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்தும், நிறை குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது, கிளாம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் வர கடும் சிரமத்தைச் சந்திப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பயணிகள் கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் கிளாம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து முனையத்தில் செல்லும் வகையில் சில நாட்களுக்கு மட்டுமே கட்டண மில்லா பேருந்து சேவை இயக்கப் படும் என உறுதி அளித்ததுடன், இது  தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின்னர் இப்போது தான் முதன்முதலாக பண்டிகை கால பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் சில சிறு பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். இந்தப் பிரச்சனைகள், குழப்பங்கள் விரைவில் தீர்க்கப்படும்”என்றார். ஆம்னி பேருந்துகளில் அதிக  கட்டணம் வசூலிப்பதாக உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரி வித்தார்.