சென்னை, ஜூன் 10- வண்டலூர் உயிரியல் பூங்கா சாலை அருகே மருத்துவமனை அமைக்க ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு ஒதுக்கிய, ஒதுக்கீட்டை ரத்து அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இது தொடர்பாக வில்லிவாக்கத் தைச் சேர்ந்த ஆரோன் சாமுவேல் மருத்துவமனை சொசைட்டி சார்பில் ஜி.ஆரோன் தேவதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது மருத்துவமனை சொசைட்டி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வ தற்காக வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் வேளாண் துறைக்கு சொந்த மான 20 ஏக்கர் அரசு நிலம் கடந்த 1969 ஆம் ஆண்டு ஏக்கர் ரூ.300 வீதம் எங்களது சங்கத்துக்கு ஒதுக்கப் பட்டது.
பின்னர் ரூ. 60 ஆயிரம் அந்த நிலத்துக்காக அரசுக்கு செலுத்தப் பட்டுள்ளது. அதன்பிறகு வண்டலூர் பகுதியில் உயிரியல் பூங்கா அமைப் பதற்கு தேவைப்படுவதாக கூறி எங்களுக்கு வழங்கப்பட்ட அந்த 20 ஏக்கர் நிலத்தை திருப்பி எடுத்துக் கொண்ட தமிழக அரசு அதற்குப் பதிலாக வனத்துறைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கடந்த 1975 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த 20 ஏக்கரில் சில பகுதிகளை ஆக்கிரமிப்பு வனத்துறை அந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளது. இதை அகற்றும்படி வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தில் மருத்துவமனை அமைக்க தடையில்லா சான்று வழங்க மறுத்த வனத்துறை, தற்போது அந்த நிலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்குள் மருத்துவமனை அமைக்கப்படவில்லை எனக்கூறி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்துக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது சட்டவிரோதமானது. வனத் துறை நட்டு வைத்த மரக்கன்றுகளை அகற்றாத காரணத்தாலும், தடை யில்லா சான்று வழங்காததால் எங்களால் மருத்துவமனை அமைப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்து, அந்த நிலத்தை மருத்துவ மனை அமைப்பதற்காக எங்களிடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர். ரமன்லால் ஆஜராகி, மருத்துவமனை அமைப்ப தாக கூறி அந்த சங்கம் பெற்ற 20 ஏக்கர் அரசு நிலத்தில் எந்த ஒரு பணிகளை யும் தொடங்கவில்லை. எனவே, அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசு உத்தர விட்டுள்ளது. இதில் எந்த ஒரு விதிமீறல் இல்லை.
எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என வாதிட்டார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ராஜராஜன், வனத்துறை மரக்கன்றுகளை நட்டு வைத்து, தடையில்லா சான்று வழங்க மறுத்த காரணத்தால் தான் மருத்துவ மனை பணிகளை தொடங்க முடிய வில்லை. எனவே ஒதுக்கீட்டை ரத்து செய்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும், என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த சங்கத்துக்கு வழங்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்துக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த விதிமீறல் இல்லை. அந்த அரசாணை செல்லும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.