நிழல் பந்தலில் கனரக லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
கடலூர், மே 5- கடலூரில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகனம் ஓட்டுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக கடலூர் மஞ்சக்குப்பம் வி ஸ்கொயர் மால் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இரண்டு பக்கமும் போக்குவரத்து போலீசார் தனியார் உதவியுடன் நிழல் பந்தல் அமைத்துள்ளனர். போக்குவரத்து சிக்னலில் இரண்டு நிமிடம் வாகன ஓட்டிகள் சாலையில் வெயிலில் நிற்பதால் மிகுந்த சிரமப்படுவார்கள் என்று இந்த நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹூண்டாய் கார் ஏற்றிக் கொண்டு மிக உயரமான கனரக டாரஸ் வாகனம் ஒன்று திங்கட்கிழமை (மே 5) மதியம் நிழல் பந்தலை கடக்கும் போது சிக்கிக் கொண்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நிழல் பந்தல் முழுமையாக பிரித்து அகற்றப்பட்டு லாரி அனுப்பி வைக்கப்பட்டது.
ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
சிதம்பரம்,மே 5- காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது சுமார் 100 கிலோ எடை கொண்ட 3 அடி உயரமுள்ள நடராஜர், நந்தி திருவாச்சி உள்ளிட்ட உலோகத்தால் ஆன சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அடுத்து கொல்லிமலை கீழ்பாதி கிராமம், ஜெ.என்.நகரை சேர்ந்தவர் முகமது அப்சர் (35). இவர், புதிதாக வீடு கட்டு வதற்கு பள்ளம் தோண்டி யுள்ளார். அப்போது சுமார் 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, சிதிலமான திரு வாச்சி, அஸ்தி தேவர்,1 அடி பிரதோஷ நந்தி வாகனம் உள்ளிட்ட ஐம்பொன் உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டு மன்னார்கோயில் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் வட்டாட்சியர் பிரகாஷ் சிலைகளை எடுத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட னர். பிறகு, சிலைகள் அனைத்தும் காவல்துறை பாது காப்புடன் வட்டாட்சியர் அலு வலகம் கொண்டு செல்லப் பட்டது. பின்னர், காவல்துறை ணயினர் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் தொடர்ந்து மண்ணை தோண்டும் பணியில் அதிகாரி கள் ஈடுபட்டனர்.
ஆபாசமாக படம் வெளியிட்ட பொறியாளர் கைது
சிதம்பரம், மே 5- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும 2 மாணவிகளின் புகைப் படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘மார்பிங்’ செய்து ஆபாசமாக தொலை பேசி எண்ணுடன் மர்ம நபர்கள் வைரலாக்கியுள்ளனர்.இதனைப் பார்த்து பல பேர் அந்த மாணவியை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொலைபேசியில் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக துறை அதிகாரிகளிடம் மாணவி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் 4 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. மேலும் இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் புகார் அளித்தார். பிறகு, காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதை யடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் இதை செய்யவில்லை என தெரிய வந்தது. இதுகுறித்த தொடர்ந்து நடத்திய விசாரணையில், புகார் அளித்த மாணவியின் தோழியின் ஆண் நண்பர் தெற்கு சாலியந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த நக்கீரன்( 25) மென்பொருள் பொறியாளர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.