tamilnadu

திருவாரூர், மயிலாடுதுறையில் கொட்டித் தீர்க்கும் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை/திருவாரூர், நவ.26 - வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு  பகுதி புயலாக மாறியதால்,  டெல்டா மாவட்டங்களில் கடந்த ஓரிரு நாட்களாக கனமழை பெய்து  வருகிறது. 

மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்ட ங்களுக்கு ரெட் அலர்ட் விடப் பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி களுக்கு மாவட்ட நிர்வாகம் விடு முறை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்களன்று மாலை  முதல் கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. குறிப்பாக தரங்கம்பாடி வட்டத்தில் மட்டும் செவ்வாயன்று மாலை  வரை 15 செ.மீ மழை பெய்துள்ளது.  இதனால் பொறையார், தில்லை யாடி, சங்கரன்பந்தல், திரு விடைக்கழி, திருவிளையாட்டம், உத்திரங்குடி மீனவ கிராமங்க ளான மாணிக்கப்பங்கு, பெருமாள் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு  வெளியே செல்ல முடியாத அள விற்கு இடைவிடாது மழை பெய்வ தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்வதால்,  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் மழையால் விவசாயி கள் அச்சத்தில் உள்ளனர். 

நீரால் சூழப்படும் பயிர்கள்

திருவாரூரில் சம்பா, தாளடி சாகுபடி தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில், 1,05,856 ஹெக்டே ரில் சம்பா சாகுபடியும், 37,187 ஹெக்டேரில் தாளடியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் சம்பா சாகுபடியும், குடவாசல், நன்னிலம், வலங்கை மான், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் தாளடி யும் அதிகமாக சாகுபடி செய்யப் பட்டுள்ளன.

தற்போது, பெய்து வரும் மழையால் பெரும்பாலான விளை நிலங்களில் நீரின் அளவு அதி கரித்து வருகிறது. குறிப்பாக, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர் பகுதிகளில் வயல்களில் உள்ள பயிர்களை மழைநீர் சூழத்  தொடங்கியுள்ளது. சுமார் 10,000 ஹெக்டேருக்கு மேல் வயல்களில் மழைநீர் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளதாகவும், தொடர்ந்து, மழை  பெய்யும் பட்சத்தில் வளர்ச்சி நிலை யிலுள்ள பயிர்கள் மழைநீரில் மூழ்கும் வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில் பயிரி டப்பட்டுள்ள அனைத்துப் பயிர் களும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

கனமழை பெய்யத் தொடங்கி யதையடுத்து, திருவாரூர் மாவட்டத் தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவிட்டார்.  

மழையளவு

திருவாரூர் மாவட்டத்தில், செவ்வாயன்று காலை 6 மணி  முதல் மாலை 6 மணி வரை  12 மணிநேர நிலவரப்படி திருவாரூ ரில் அதிகபட்சமாக 97.2 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம் - நன்னிலம் 80.8 மி.மீ, மன்னார்குடி 77.5 மி.மீ, திருத்துறைப்பூண்டி 73.6 மி.மீ, முத்துப்பேட்டை 67.6 மி.மீ, குடவாசல் 55.4 மி.மீ, பாண்டவையாறு தலைப்பு 54.8 மி.மீ, வலங்கைமான் 49.4 மி.மீ என  மாவட்டம் முழுவதும் 629.5 மி.மீ  என சராசரியாக மழை பதிவாகி வுள்ளது.