tamilnadu

img

தமிழகத்தில் கனமழை: 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும் திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


 

;