tamilnadu

img

என்னைப் பற்றி பேச அருகதையற்றவர்

“நான் எந்த நேரத்திலும் கோரிக்கை வைக்காத நிலையில், ‘என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. என்னுடைய விசுவாசத்தைப் பற்றி பேச ‘பத்துத் தோல்வி’ பழனிசாமிக்கு தகுதியில்லை. முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.