சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ருத்திரகோட்டி (வயது 42) உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது 4 குழந்தைகளின் கல்விச் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்தினை வழங்கி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.உடன் மாவட்ட ஆட்சியர் வளர்மதி உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.