tamilnadu

விரைவுப் பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைகளுக்கும் கட்டணச் சலுகை வழங்குக!

சென்னை, மார்ச் 14-  அரசு விரைவுப் போக்குவரத் துக்கழக பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைகளுக்கும் மாற்றுத்  திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை  வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி முதலமைச்சருக்கு தமிழ்  நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் தோ.வில்சன், மாநி லப் பொதுச்செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் அனுப்பிய மனு வருமாறு:

குறைதீர் கூட்டம் நடத்தியமைக்கு நன்றி
 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ்  நாடு அரசு போக்குவரத்துக் கழ கங்களில் பணிபுரிந்து வரும் மாற்  றுத்திறனாளி ஊழியர்களின் பல்  வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு  காண்பதற்காக அனைத்து கோட் டங்களிலும் அவர்களுக்கென தனி யாக குறைதீர் கூட்டம் நடத்திய மைக்காக  சங்கத்தின் சார்பில் நன்றி யை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற குறைதீர் கூட்டங் களை 6 மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தி, அவர்களது குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

அரசுப்பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் போது  மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக் கப்பட்டுள்ள இருக்கைகளை அப கரித்து அவ்விருக்கைகளில் அம ரும் பிற பயணிகளை எச்சரிக்கும் விதத்தில் அதற்கான அபராதத் தொகையாக ரூ.500 (அ) 1000-ஐ இருக்கை மேல்புறத்தில் எழுதி விளம்பரப்படுத்திட வேண்டும்.

ஊர்திப் படி ரூ.2500 வழங்கிட வேண்டும்
அரசு விரைவுப் போக்குவரத்து கழக (SETC) பேருந்துகளில் பய ணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கை கள் (Berth) சலுகை கட்டணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இணையதள முன்பதிவிலும் மாற் றுத்திறனாளிகளுக்கான படுக்கை வசதி காண்பிக்கப்படுவதில்லை. எனவே, அரசு விரைவு போக்குவரத்  துக்கழக பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கைகளுக்கும் (Berth) மாற்றுத் திறனாளிகளுக்கு கட்ட ணச் சலுகை வழங்கிட வேண்டும்.

அரசுப் போக்குவரத்துத்துறை யில் பணியாற்றி வரும் ஊர்திப்படி  (Conveyance Al- lowance)  வழங்கப்படாத அனைத்து மாற் றுத்திறனாளி ஊழியர்களுக்கும் உடனடியாக ஊர்திப் படி ரூ.2500 வழங்கிட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

அரசு போக்குவரத்துக் கழகம்  திருநெல்வேலி கோட்ட பேருந்து களில் மாற்றுத்திறனாளியுடன் பய ணிக்கும் பாதுகாவலருக்கான துணையாளர் பாஸ் (Escart Pass) 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்  டிப்பாக புதுப்பிக்கப்பட வேண்டும்  என்ற நடைமுறை கட்டாயப்படுத் தப்பட்டு வருகிறது. அதனை தவிர்த்  திட உரிய தலையீடு செய்ய வேண்  டும்.

கோவை கோட்டத்தில் ஆதார் நகல் கேட்டு துன்புறுத்தல்
அரசு கோவை கோட்ட பேருந்து களில் மாற்றுத் திறனாளிகளுடன் பயணிக்கும் பாதுகாவலருக்கு 75 சதவிகித கட்டணம் வசூலிப்பதும், ஆதார் நகல் கேட்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்  கண்ட கோரிக்கைகளை நிறை வேற்றித் தருமாறு  கேட்டுக் கொள்கி றோம். 

இவ்வாறு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன்,  மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்ர வர்த்தி ஆகியோர் இந்த மனுவின் நகலை போக்குவரத்துத்துறை கூடு தல் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து வழங்கினர்.