tamilnadu

img

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் பரிந்துரை

சென்னை, மே 30- முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை, எம்.பி. -  எம்எல்ஏக்கள் மீதான வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றுமாறு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதி மன்றம், சிபிஐ முதன்மை நீதி மன்றத்துக்கு பரிந்துரைத் துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா  பொருட்களை சட்டவிரோத மாக விற்பனை செய்ய லஞ்  சம் பெற்றுக்கொண்டு அனு மதி வழங்கியது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்  குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் முன் னாள் அமைச்சர்கள் சி. விஜ யபாஸ்கர், பி.வி. ரமணா மற்  றும் காவல்துறை உயர் அதி காரிகள், ஒன்றிய - மாநில அரசு உயர் அதிகாரிகள் என  பலர் மீது குற்றச்சாட்டு வைக்  கப்பட்டு, சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த  2022-ஆம் ஆண்டு நவம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குட்கா வழக்கில் முன் னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதி ராக விசாரணை நடத்த ஒப்பு தல் அளித்து தமிழக ஆளுந ரும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையில் முன்  னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் 16-வது நபராக குற்  றம் சாட்டப்பட்டுள்ள நிலை யில், வழக்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அவர் 17-வது நபராக சேர்க்  கப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சிபிஐ புலன் விசாரணை அதிகாரி சார் பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனு வில், விஜயபாஸ்கர் 16-ஆவது நபராக குற்றம் சாட்  டப்பட்டுள்ளார் என்றும், கூடு தல் குற்றப்பத்திரிகையில் எந்  தக் குறைபாடும் இல்லை  என்றும் தெரிவிக்கப்பட்டி ருந்தது.

அதையடுத்து இந்த  வழக்கை வியாழனன்று விசா ரித்த சிபிஐ கூடுதல் சிறப்பு  நீதிமன்றம், இந்த வழக்கில்  முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள தால், இந்த வழக்கை எம்.பி,  எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்  றக்கோரி சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்து, விசாரணையை  வரும் ஜூன் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.