சென்னை:
தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும்” என்ற “இறையாண்மை மிக்க ” உத்தரவாதத்தை மத்திய பாஜக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ள செயல் மிகுந்த வேதனைக் குரியது என கூறியுள்ளார்.இதற்கு முன்னர் நடந்த நிகழ்வொன்றில் கேரள மாநில நிதி அமைச்சர் வாக்கெடுப்பு கோரினார் இதனை ஜிஎஸ்டி கவுன்சிலும் ஏற்றுக்கொண்டது.எனவே ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருக்கும் வாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி, “ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும்” “மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்” வாக்கெடுப்பு நடத்த ஆக்கபூர்வமாக வலியுறுத்தி - மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.