கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மே 28,29,30 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் - 1 முதன்மை தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.