tamilnadu

அரசு ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை

சென்னை, ஏப். 9-

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் பணியிடமாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,“அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது. டியூசன் எடுக்கும் ஆசிரியர் களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடம் ஊதியம் பெறுபவர்கள் லாப நோக்கத் திற்காக டியூசன் எடுப்பது விதிமீறலாகும். தனியாக டியூசன் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் இலவச தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்” என்று உத் தரவிட்டார்.

;