tamilnadu

img

காவல்துறையினர் தாக்கியதில் வேன் ஓட்டுநர் மரணம் : சிபிஎம் கண்டனம்

சங்கரன்கோவிலில் காவ லர்கள் தாக்கி வேன் டிரை வர் முருகன் மரணம் அடைந்த சம்ப வத்திற்கு கண்டனம் தெரி வித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண மும், அரசு வேலையும் வழங்கிட வும் முதலமைச்சருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, முதல்வ ருக்கு கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், பிப்ரவரி 10 ஞாயிறன்று எழுதியுள்ள கடிதம் வருமாறு: தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலில் முன்சென்ற ஆட்டோ வை லேசாக இடித்ததற்காக வேன் டிரைவர் முருகன் என்பவரை அங்கி ருந்த காவலர்கள் மூன்று பேர் சராமரியாகத் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் இதுபோன்ற சட்டவிரோத கண்மூடித்தனமான தாக்குதலை வன்மையாக கண் டிப்பதுடன், இதுபோன்ற மனித உரிமை மீறிய செயல்களை தடுப்ப தற்கு உரிய தலையீடுகளை மேற் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.  

எனவே,  1.    தவறிழைத்த காவல்துறையினர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.  2.இத்தகைய சாதாரண தவறு களுக்காக  காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு,  காவல்துறையினர் இதுபோன்ற தவறிழைத்தால் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

 3.தமிழ்நாடு அரசு மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தாலும் இத்த கைய சம்பவங்கள் நடப்பது தமிழ் நாட்டிற்கு பெருமை அளிப்பதாக இல்லை. எனவே, கடும் நடவ டிக்கைகளும், பயிற்சிகளும், சீர்த்திருத்தங்களும் காவல்துறை யில் மேற்கொள்ள வேண்டும். 4.முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணமும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை யும், வீடும் அளித்திட வேண்டும்.

முருகனின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.  5.இழப்பீட்டுத் தொகையை தவறி ழைத்த காவல்துறையினரிடமி ருந்தே வசூல் செய்திட வேண்டும்.  முதலமைச்சர் அவர்கள், மேற் கண்ட நடவடிக்கைகளை அவசர மாக மேற்கொண்டு உயிரிழந்த முருகன் குடும்பத்திற்கு உரிய நிவா ரணமும், ஆறுதலும் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கி றோம். இவ்வறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.