பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலுக்கு வலைவீச்சு
சென்னை, மே 24- சென்னை சைதாப்பேட்டையில் பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரை சேர்ந்த நாகபூஷ்ணம் மகன் சஞ்சய் (15). இவர் நந்தனம் ஒய்எம்சிஏ பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் சஞ்சய், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார். அந்த=‘ கடையில் வீடுகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார். சனிக்கிழமை அதிகாலை வேனில் அந்த கடைக்கு வந்த தண்ணீர் கேன்களை சஞ்சய் இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சஞ்சயிடம் தகராறு செய்தது. தகராறு முற்றவே அந்த கும்பல் சஞ்சயை அரிவாளால் வெட்டியது. இதில் சஞ்சய் பலத்தக் காயமடைந்து, மயங்கி விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. சஞ்சய் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை கவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் சஞ்சய்க்கும் அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருப்பதும், அந்த முன் விரோதத்தின் காரண மாக சஞ்சய் வெட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து காவல் துறையினர் சைதாப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த 10 பேரை தேடி வருகின்றனர்.
புதிய தெருவிளக்குகளை இயக்கி வைத்த கவுன்சிலர்
திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜோதி நகர் முதல் சடையங்குப்பம் வரை உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள 28 தெருவிளக்குகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் இயக்கி வைத்தார். இதில் மாநகராட்சி மின்துறை பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் கணேஷ், லைன் இன்ஸ்பெக்டர் பால் ஆன்ரூஸ், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கடையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிண்டி மகளிர் ஐடிஐ-யில் ஜூன் 13வரை மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது
சென்னை, மே 24 - கிண்டி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) ஜூன் 13ந் தேதி வரை மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் என்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே 19ந் தேதி தொடங்கி மாணவிகள் சேர்க்கை நடை பெற்று வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேறியவர்கள், தோல்வி யுற்றவர்கள் ஓர் ஆண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி முடிந்தவுடன் 100 விழுக்காடு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. கட்டணமில்லாத இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், தையல் கூலியுடன் கூடிய 2 செட் சீருடை, மூடுகாலணி (ஷூ), பேருந்து மற்றும் இரயில் பயண சலுகை அட்டை, 750 ரூபாய் மாதந்திர உதவித்தொகை, தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித் தொகை போன்றவை வழங்கப்படும். www.skilltraining.gov.in என்ற இணையதளம் மூலம் வாயிலாக ஜூன் 13ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்தும் விண்ணப்பிக்கலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட் புகைப்படம், வருமானச்சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-2510001, 8838218545, 9444387704 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.