tamilnadu

ரயில்வே பணிக்கான தேர்வு கடலூரில் இலவச பயிற்சி

கடலூர், ஏப். 10-இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குரூப் டி போன்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண் ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 12ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மேற்கண்ட ரயில்வே பணிகளுக்கு விண் ணப்பித்திருந்தால் அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் நடைபெற உள்ள பயிற்சி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் இப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுகுமாரன் அவர் களை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கைபேசி எண். 9442378723.

;