tamilnadu

img

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்....

சென்னை:
தமிழக முன்னாள் அமைச்சர்  அரங்கநாயகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த அரங்கநாயகம் உடல் நலக்குறைவால்  காலமாகிவிட்டார் என்பது துயரமான செய்தியாகும்.தமிழகத்தின் கல்வியமைச்சராக அவர்  பணியாற்றிய போது அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையிலும் கல்வித்துறையில் பலமுன்முயற்சிகளை மேற்கொண்டவர் அரங்கநாயகம் அவர்கள்.அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில்தெரிவித்துள்ளார்.

;