tamilnadu

img

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனிக் கொள்கை உருவாக்க வேண்டும்! நாகை மாலி எம்எல்ஏ கோரிக்கை

சென்னை, ஜூன் 22- வெளிமாநிலங்களில் இருந்து  தமிழ்நாட்டுக்கு வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனியாக கொள்கை ஒன்றை அரசு  உருவாக்க வேண்டும் என்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி வலி யுறுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்  டத்தொடரில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி  சனிக்கிழமையன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பங்கேற்றுப் பேசியதாவது: 

“வெளி மாநிலங்களில் இருந்து  தமிழ்நாட்டுக்கு பல்வேறு வகை யிலும் தொழிலாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதை நாம் அனை வரும் அறிவோம். 

பாராட்டுக்குரிய நடவடிக்கை 

தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், சட்டச்  சலுகைகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மாநில அரசு வழங்க வேண்டும்.  ஏற்கெனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என சட்டம்  உள்ளது. இதை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். கார ணம், தமிழ்நாட்டுக்கு புலம்பெய ர்ந்து உள்ள தொழிலாளர்களுக் காக நமது அரசு பல்வேறு திட்டங்  களை தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகிறது. இது வரவேற்  கக்கூடியது. 

ஆனாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்? இவர்களுக்கு என்ன வேலை வழங்கப்படுகிறது? அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள்? எத்  தனை மணி நேரம் வேலை செய்கி றார்கள்? என்ற விபரம் கிடையாது. 

அவர்கள் அநாதைகள் அல்ல! 

மேலும் இவர்கள் பெரும்பா லும் வேலை செய்யும் இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். அது வும் சுகாதாரமற்ற இடங்களில் தங்க  வைக்கப்படுகிறார்கள். எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை முதலில் பதிவு செய்ய வேண்டும்.  அவர்கள் என்ன வேலை செய்கி றார்கள்? எங்கு வேலைக்கு செல்கி றார்கள்? என்பதை கண்டறிந்து பதிவு செய்வதை நமது அரசு முறைப்  படுத்த வேண்டும். 

சமமாக மதிக்க வேண்டும் 

தமிழ்நாட்டில் உள்ள நமது  தொழிலாளர்களை போலவே  புலம்பெயர்ந்த தொழிலாளர்களை யும் மதிக்க வேண்டும். நமது  தொழிலாளர்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பிரிவினையை காட்டாமல் சமமாக  நடத்துவது மிக மிக முக்கியமானதா கும். இதை முறைப்படுத்தவும் அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எனவே தமிழகத் தொழிலாளருக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக் கும் வழங்க அரசு முன் வர வேண்  டும். இவ்வாறு நாகை மாலி பேசி னார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு
உரிய சட்ட பாதுகாப்பு: அமைச்சர் உறுதி

சென்னை, ஜூன் 22- புலம்பெயர்ந்த தொழிலா ளர்களுக்கு உரிய சட்ட பாது காப்பு வழங்கப்படுகிறது என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர் நாகை மாலி எழுப்பிய வினாக்  களுக்கு பதில் அளித்து, தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் சி.வி.  கணேசன் கூறியதாவது:

“வெளிமாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ்  நாட்டிற்கு வந்து பதிவு செய்த  தொழிலாளர்கள் அனைவருக் கும் நமது தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் கல்வி, திரு மணம், மகப்பேறு, இயற்கை மர ணம், விபத்து மரணம், இறுதிச் சடங்கு உதவி, கண் கண்ணாடி போன்ற அனைத்து திட்ட பலன்  களும் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழ்நாட்டில் கடந்த  ஆண்டு செப்டம்பர் 20 வரை  1958 வெளி மாநில தொழிலாளர் கள் இணையதளம் மூலம் நல  வாரியத்தில் பதிவு செய்துள்ள னர். பணி நேரம், மிகைப் பணி நேரம், மருத்துவம் உள்ளிட்ட பல்  வேறு சலுகைகளும் அவர் களுக்கு வழங்கப்படுகிறது.

திமுக அரசு எடுத்து வரும் நட வடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக பீகார் மாநில அதி காரிகளிடம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ள னர். கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளும் வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போ தும் அவர்களுக்கு உரிய சட்ட  பாதுகாப்பு வழங்கப்பட்டு வரு கிறது.

இவ்வாறு அமைச்சர் கூறி னார்.

தஞ்சையிலிருந்து பெரம்பலூர் வழியாக புதுக்கோட்டைக்கு நான்கு வழிச்சாலை!
எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை 

சென்னை, ஜூன் 22- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்ன துரை, “பெரம்பலூர் - மானா மதுரை சாலையில் தஞ்சாவூரில் இருந்து புனல்குளம், கந்தர்வக் கோட்டை, ஆதனக் கோட்டை, பெரம்பலூர் வழியாக புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இது விபத்துக்கள் அதிகரித்து வருவதை தவிர்ப்பதற்கு அந்தச் சாலையை அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக அமைத்துக் கொடுக்க அரசு முன்வருமா? என்றார்.  இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ. வேலு, உறுப்பினரின் கோரிக்கை குறித்து துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி முத லமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்” என்றார்.