tamilnadu

உடுமலைப்பேட்டை சிறுமிக்கு கும்பல் வல்லுறவுக் கொடுமை!

சென்னை, மே 13 - உடுமலைப்பேட்டையில் சிறுமி கும்பல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்ட குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா  அறிக்கை விடுத்துள்ளனர். “உடுமலைப்பேட்டையில் சிறுமியை கும்பல் பாலியல் வல்லுறவு செய்ததாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் மூன்று பேர் சிறுவர்கள்  என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள், குழந்தை களின் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஈடுபடுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.மிக மோசமாக நடந்துள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இக்குற்ற செயலில் ஈடுபட்ட 9 பேர் உடனடியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இச்சம்பவத்தை முழுமையாக விசார ணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் குற்ற வாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் கடுமை யான தண்டனைகள் தாமதமின்றி கிடைத்திட நீதிமன்ற நடவடிக்கைகளை வேகப்படுத்திட வேண்டும்.

முறை யான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்படு வதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ சட்டப்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவி, மனநல ஆலோசனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தையின் படிப்பு தடைப்படாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.”  

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.