tamilnadu

ஜூலை 26 முதல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம்... அமைச்சர் பொன்முடி....

சென்னை:
மாணவர்கள் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 26ஆம் தேதி முதல் விண் ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள் ளார்.இதுதொடர்பாக சென் னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘’பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு மதிப் பெண்களை வெளியிட்டுள் ளார். இதை மாணவர்கள் உடனடியாக காண முடியும் என்றாலும் ஜூலை 22ஆம் தேதி முதல் அவர்கள் மதிப் பெண்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என்றார்.

மாணவர்களுக்கு மதிப் பெண்கள் கிடைத்தவுடன் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி உள் ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க் கைக்கான பணிகள் தொடங் கும். மாணவர்கள் ஜூலை 26 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது எனவும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் களுக்கு ஏற்ப அந்தந்த கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்’’ என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அதிமுக ஆட்சிக் காலத் தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, “அதுகுறித்து பிறகு அறிவிக் கப்படும். நிதிநிலை அறிக்கையில் சில அறிவிப்புகள் வெளியாகும்’’ என்றார்.

;