சென்னை, டிச.21- “ஒரு பக்கம் விழா, மறுபுறம் அம்பேத்க ருக்கு அவமரியாதை; இதுவே பாஜகவின் பசப்பு அரசியல்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டு மக்கள் ‘40/40’ என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது , நாடாளுமன்றத் திற்கு சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்பி னார்கள். ஆனால், அவர்களெல்லாம் வாய டைத்து போகும் அளவிற்கு எம்.பி.க்களின் செயல்பாடு அமைந்துள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் நடத்த முடியாது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். தமிழக எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவிக்க வேண்டி யது முக்கியம் என கருதுகிறேன்.
தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப் பது, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்ச னைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகர மாகச் செய்து காட்டியுள்ளனர்.
தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் நடத்த முடியாது என அவையில் எம்.பி.க்கள் முழங்கினர். ஒன்றிய அரசு இனியும் திருந்த வில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் பதிலடி தருவார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் விழா கொண்டாட்டத்தின் போது அச்சட் டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம் பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே அவதூறு செய்து இழிவுபடுத் திப் பேசுவது, பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒரு புறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன் னொரு புறம் அதை உருவாக்கித் தந்த அண் ணலுக்கு அவதூறு. இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் ஆகும். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.