பூந்தமல்லி நெடுஞ்சாலை- நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் நடை மேம்பாலம்
சென்னை, மே 16 - பூந்தமல்லி நெடுஞ்சாலை - நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் ரூ.15.5 கோடி மதிப்பீட்டில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையை பல லட்சம் வாகனங்கள் பயன்படுத்துகின்றன. வாகன நெரிசலை குறைக்கும் வகையில் பூந்த மல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை - அண்ணாநகரை இணைக்கும் வகையில் இரண்டு இணைப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அமைந்த கரையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றின் மீதுள்ள மேம்பாலங்கள் அகலப்படுத்தப்பட்டன. இருப்பினும் ஆறு வழி பாதை கொண்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன நெரி சல் குறையவில்லை. நெரிசலான சமயங்க ளில், ஒரு மணி நேரத்தில் சுமார் 1,300 பாத சாரிகளும், 22 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சாலையைப் பயன்படுத்து கின்றன. இதன்காரணமாக அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனை தவிர்க்க பூந்தமல்லி நெடுஞ்சாலை - நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டது. பாதசாரிகள் ஏறி இறங்கும் இருபுறமும் படி க்கட்டுகள் மற்றும் இரண்டு ஜோடி நகரும் படிக்கட்டுகளுடன் கூடியதாக பாலம் வடி வமைக்கப்பட்டது. இதன்படி 15.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. 5 மீட்டர் அகலம், 45 மீட்டர் நீளம் கொண்ட இந்த நடை மேம்பாலம், சாலையின் மட்டத் திலிருந்து 5.7 மீட்டர் உயரத்தில் அமையும் வகையில் திட்டமிடப்பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக பணிகள் நிறுத்தப் பட்டன. மக்கள் சாலையை கடப்பதால் ஏற்படும் விபத்து, வாகன நெரிசலை தவிர்க்க விரைந்து பணிகளை முடிக்க வேண்டுமென்று அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்து கிடந்தனர். அதற்கேற்ப நீதி மன்ற வழக்குகள் முடிவுற்ற நிலையில், பணி கள் துரிதமாக நடந்து வருகின்றன. அக்டோப ரில் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.