சென்னை, ஜூலை 3- புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழ கத்திலும் திங்கட்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் முதல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அப்தாப் அலி என்பவரிடமிருந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல் போனை பறித்துவிட்டு தப்பியதாக ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தி னர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப் பிரிவு 304(2) என்ற பிரிவின் கீழ் இந்த வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இதேபோல் சென்னை நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், துரைப் பாக்கம், கோட்டூர்புரம் என சென்னை யில் 10 வழக்குகள் புதிய குற்ற வியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுபோக தாம்பரம், ஆவடி காவல் ஆணை யரகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வழக்கு பதிவானது.
ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி யில் 25 வயது பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்ததாக சாரதி (21) என்ற இளைஞரை புதிய சட்டப்பிரிவின் கீழ் முதன்முதலாக ஐஸ் ஹவுஸ்காவல்நிலையத்தினர் கைது செய்தனர்.