தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஒத்திகை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஒருங்கி ணைந்த தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவு வளா கத்தில், செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீவிபத்து குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடத்தப் பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவசங்கரன் முன்னிலையில், தீய ணைப்புத் துறையினர் தீ விபத்து குறித்து விளக்கியும் தீ விபத்து ஏற்படும் பொழுது எவ்வாறு தீயை அணைப்பது,தீயில் சிக்கிக் கொண்டவர்களை தனி நபராகவும், கூட்டாக வும் இருந்து எவ்வாறு மீட்பது என்பதை தத்ரூபமாக செய்து காட்டினர். இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி மாண வர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், காவலாளி கள் கலந்துகொண்டனர்.