சென்னை, ஜூலை 11- அரசு கலை அறிவியல் மற் றும் கல்வியியல் கல்லூரிகளில் 4000 ஆசிரியர் நிரந்தர பணி யிடங்களை விரைந்து நிரப்பு வதுடன், கவுரவ விரிவுரையாளர் களுக்கு உரிய ஊதியத்தை உட னடியாக வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு அரசுக் கல் லூரி ஆசிரியர் கழகம் வலி யுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழ கத்தின் பொதுச்செயலாளர் (TNGCTA) பேரா.சோ. சுரேஷ் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
தமிழகத்தில் 171 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் செயல் பட்ட அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69-தான். தற்போது அதன் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி யில் சேர்பவர்களின் எண் ணிக்கை 54 சதவிகிதமாக, அதா வது அகில இந்திய சராசரியை விட இரு மடங்கிற்கும் அதி கமாக இருப்பதற்கு அரசு கல்லூ ரிகளின் பங்களிப்பு முக்கியமா னது.
ஆனால், இதில் இருக்கும் சுமார் 12 ஆயிரத்து 500 ஆசிரி யர் பணியிடங்களில் சுமார் 7500 பேர் கவுரவ விரிவுரையா ளர்களாக பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பது மறுக்கப்பட்டு மாதம் ரூ. 25,000 மட்டுமே தொகுப்பூதி யமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதுவும் கடந்த 3 மாதமாக வழங்கப்படாத நிலையில் அர சுக் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கவுரவ விரி வுரையாளர்கள் வாழ்வாதாரத் திற்கு மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர்.
எனவே, கவுரவ விரிவுரை யாளர்க்குரிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என வும், 4000 ஆசிரியர் நிரந்தர பணி நியமனம் குறித்து நீதி மன்றத்தில் இருக்கும் வழக் கினை விரைந்து முடித்து அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழ கம் சார்பாக கேட்டுக் கொள்கி றோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.