tamilnadu

நீதிமன்ற வழிகாட்டுதல் படி கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்

சென்னை, ஜன. 11 - நீதிமன்ற வழிகாட்டல் படி, தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள கோரிக்கை களுக்கு தீர்வு காண வேண் டும் என்று போக்குவரத்து அனைத்து சங்க கூட்ட மைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தொழிற் சங்கங்கள் மற்றும் ஓய்வு  பெற்றோர் நல சங்கங்களின்  கூட்டமைப்பு, போக்கு வரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில்  வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது.

அதன் பேரில் தொழிலாளர் தனி  இணை ஆணையர் முன்னி லையில் 3 சுற்று சமரச  பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதில், நிர்வாகத் தரப்பில் எவ்வித சாதகமான பதில் தெரிவிக்கவில்லை. எனவே, ஜன.9 முதல் வேலை நிறுத்தம் நடை பெற்றது. வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதை விசாரித்த நீதிமன்றத்திடம், பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற் சங்கங்கள் சார்பில் தெரிவிக் கப்பட்டது. அதனடிப்படை யில் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டது. அதன்படி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் ஜன.11 அன்று பணிக்கு திரும்பிவிட்டனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, யார் மீதும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்க கூடாது. ஏற்கனவே, அவர் கள் செய்த பணியையே தொடர்ந்து செய்ய அனு மதிக்க வேண்டும்.

பழிவாங் கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும், சமரச பேச்சு வார்த்தையில் பங்கேற்று கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனவும் நீதி மன்றம் கூறியுள்ளது. எனவே, ஜன.19 அன்று நடைபெறும் சமரச பேச்சு வார்த்தையில்  கோரிக்கை களை தீர்த்து தர முன்வர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத் தில் கூறப்பட்டுள்ளது.