“தோல்வி பயத்தில் உள்ளான பாஜக-வினர் தமிழகத்தின் பல பகுதிகளில் கலவரம் மற்றும் பதற்றச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். வாக்களிக்க வர முடியாத அளவுக்கு பொதுமக்களை பாஜக அச்சுறுத்துகிறது. இந்த அராஜக முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று திருப்பூர் பெண் தாக்கப்பட்டதை குறிப்பிட்டு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.