நெஞ்சுவலி ஏற்பட்ட மாற்றுத்திறனாளிக்கு உதவிய சிபிஎம் தாலுகா செயலாளர் மீது பொய் வழக்கு! காட்பாடி காவல்துறை ரவுடித்தனம்
வேலூர், ஏப்.22 - மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு, உதவித்தொகை உயர்வு ஆகிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாயன்று(ஏப்.22) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரி மைக்கான சங்கம் சார்பில் சென்னை யில் சட்டமன்ற தொடர் முற்றுகை போரா ட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் செஞ்சி கிராமத் தில் வசிக்கும் வேலூர் மாவட்ட தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கோபால.ராஜேந்தி ரன் மற்றும் செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ஆகிய இருவரும் திங்களன்று மாலை முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் கோபால.ராஜேந்தி ரனுக்கு திடீரென நள்ளிரவு உடல் நலக்குறைவு (நெஞ்சு வலி) ஏற்பட்ட தால் வேலூரில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல அவரது மகனும் காட்பாடி தாலுகா சிபிஎம் செய லாளருமான ஆர்.சுடரொளியன் தனது காரில் வந்தார். அப்போது அங்கிருந்த காவல் துறையை சேர்ந்த சிறப்பு பிரிவு காவலர் பாபு, பனமடங்கி காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவா உடல்நிலை பாதிப்புக்குள்ளான கோபால.ராஜேந்திரனை மருத்துவ மனைக்கு செல்லவிடாமல் பாதி வழியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். உடன் சென்றவர்கள் அவர்களை அனுப்பி வைத்த நிலையில் காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலு வலகம் அருகே வந்த போது அங்கு டிஎஸ்பி பழனி உள்ளிட்ட காவலர்கள் வழிமறித்தனர். மருத்துவமனைக்கு செல்வதாக கூறியும் கேட்காமல் ஆம்பு லன்ஸை வரவழைத்து ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியை மட்டும் அனுப்பிவிட்டு, தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன் மீது பொய்வழக்கு பதிவு செய்து லத்தேரி காவல்நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.தற்போது கோபால.ராஜேந்திரன் வேலூர் அரசு பெண்ட்லேண்ட் மருத் துவமனையில் அனுமதிக்கபபட் டுள்ளார். பின்னர் மாவட்ட செயலாளர் எஸ்.டி. சங்கரி தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கணேஷ், கட்சி உறுப்பி னர்கள் லோ.நவீன், ஶ்ரீராம் லத்தேரி காவல் நிலையம் சென்று சுடரொளி யனை விடுவிக்க வேண்டும் என கேட்ட போது பணியில் இருந்த உதவி ஆய்வா ளர் மஞ்சுநாதன் என்பவர் அரசு ஊழி யர்களை பணிசெய்ய விடாமல் தடுப்ப தோடு, எங்களையே மிரட்டுகிறீர்களா? என அவர்கள் அனைவரையும் தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு வழக்கு பதிவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர் கார் சாவியை பறித்து கொண்டு சுடரொளியனை மட்டும் வெளியே அனுப்பி உள்ளார்.