tamilnadu

போலி என்.சி.சி. முகாம் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக

சென்னை, ஆக. 20 - “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாண வர் படை (என்.சி.சி.) என்ற பெயரில் போலி முகாம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சிவா என்கிற சிவ ராமன் 13 வயது மாணவியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளதும், இந்த முகாமில் பங்கேற்ற மாண விகளுக்கு பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதும் வன்மையான கண்ட னத்திற்குரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மேலும் கூறியிருப்பதாவது: 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கிங்ஸ்லி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி நிர்வாகம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி  முதல் 9-ஆம் தேதி வரை மாணவி களுக்கு தேசிய மாணவர் படை (என்.சி.சி)  பயிற்சி முகாம்கள் நடத்தி யுள்ளது. 

இந்த போலி முகாமின் பயிற்சியாள ரான நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த  சிவராமன் என்பவர் 13 வயது மாண வியை மிரட்டி பாலியல் வல்லுற வில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த ஏனைய மாணவிகளையும் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.

பள்ளி நிர்வாகமே  சிறுமிக்கு கொலை மிரட்டல்

இதுகுறித்து தலைமையாசிரியர் மற்றும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் பாதிக்கப்படட மாணவிகள் புகார் கொடுத்த போது பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் “வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டி யுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் தனது பெற்றோரிடம் தெரிவித்த பிறகே, பெற்றோர்கள் காவல்துறை யிடம் புகார் அளித்ததன் காரணமாக இச்சம்பவம் வெளியே வந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவராமன், தலைமையாசிரியர், தாளாளர் உள்ளிட்டு 11 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

3 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல்

குற்றவாளி சிவராமன் போலியாக என்.சி.சி. ஆவணங்களை தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங் களில் பல பள்ளி, கல்லூரிகளில் இது போன்று முகாம்கள் நடத்தி மாணவி களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சிவராமன், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளியின் தாளாளர், ஆசிரி யர்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் விரைந்து விசா ரித்து உரிய தண்டனை வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. 

மேலும், இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை மேலும் பலரை கைது செய்ய இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமெனவும் தமிழக அரசை யும், காவல்துறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.