tamilnadu

img

கூடுதல் ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்.....

சென்னை:
கேரளா, காஞ்சிக்கோடு பகுதியில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.அதன்பின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ‘‘தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும். கேரளா, காஞ்சிக் கோடு பகுதியில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்கு வழங்க வேண்டும். 20 ஆக்சிஜன் கண்டெய்னர்களை வழங்க வேண்டும்.ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வழங்குவதை விட 20 மெட்ரிக் டன் அதிகமாக வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

;