சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் சார்பில் ‘கிளைமேடிகோ’ என்னும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் அதை தடுக்கும் முறைகள் குறித்து மாதிரி செயல்முறை விளக்கம் மூலமாகவும், கலைநிகழ்ச்சி மூலமாகவும் விளக்கப்பட்டன. இதில் 2 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களை பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத்தமன், இயக்குநர் வித்யா ஆகியோர் பாராட்டினர்.