சென்னை, மார்ச் 13- தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொட ர்ந்து விநியோகம் செய் யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் அடிப் படையில் புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதி யாக, குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டது.
முன்னதாக, இணைய வழியில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் சரிபார்க்கப் பட்டு தகுதியுடைய குடும் பங்களுக்கு 45 ஆயிரத்து 409 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைதாரர் கள் அளித்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள் ளது.
புதிய குடும்ப அட்டை கையில் இல்லாத கார ணத்தாலேயே அவர் களுக்கு பொருட்கள் நிறுத் தப்படாது. குடும்ப அட்டை கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அதனு டைய விவரம் குறுஞ்செய்தி யாக அனுப்பப்படுவதால், அதையே நியாயவிலைக் கடைகளில் காண்பித்து பொருட்களைப் பெறலாம் எனவும் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்புக்குப் பிறகு, பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.