tamilnadu

img

பொறியியல் மாணவர்கள் ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

சென்னை,டிச.5- பொறியியல் மாணவர் கள் புதிய புதிய ஆராய்ச்சி களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி கேட்டுக்கொண்டார்.

சென்னையில் சுமங்கலா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் சார்பில் “உங்கள் குழந்தை யும் ஆகலாம் இன்ஜினியர்” என்ற கல்வி உதவித்தொகை  திட்டத்தின் இரண்டாம் பதிப்பில் 19 மாணவர்களு க்கு கல்வி உதவித்தொகை களை வழங்கி அவர் பேசி னார். தமிழகத்தில் பயின்று  உலகில் எந்த ஒரு பகுதி யில் வேலை செய்தாலும் தமிழகத்தை மாணவர்கள் மறந்து விடக்கூடாது என்றார்.  வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தங்களை மாணவர்கள் திறன் வாய்ந்த வர்களாக தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இந்த நிகழ்ச் சியில் பேசிய சுமங்கலா ஸ்டீல்ஸ் குழுமத்தின் தலை வர் இராஜேந்திரன் சபாநாய கம்  கட்டுமானத் தொழிலா ளர்கள் மற்றும் ஸ்டீல் டீலர்ஷிப் ஊழியர்களின் குழந்தைகள் பொறியா ளர்களாக ஆவதற்கு இத் திட்டம் உதவுகிறது என்றார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகள் இரண்டிற்கும் வழங்கப்படு வதாகவும்  அவர் கூறினார்.