சென்னை, டிச. 11- மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கியதற்காக 2024-ம் ஆண்டுக்கான ஹெலன் கெல்லர் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா, புதுடெ்ல்லி, அரசியலமைப்புச் சட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் தேசிய மையத்தின் தலைவர் பிரதீப் குப்தா ஆகியோர் இணைந்து விருதினை வழங்கினர்.
சக்தி மசாலா நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் முனைவர் பி.சி. துரைசாமி இதனைப் பெற்றுக்கொண்டார். விருது பெற்ற பி.சி. துரைசாமிக்கு, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன், புதுதில்லி, கம்பன் கழகத்தின் நிறுவனத் தலைவர் கே.வி.கே. பெருமாள், செயலாளர் எஸ்.பி. முத்துவேல் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.