tamilnadu

img

எம்.ஆர்.ஆர். விக்ரம் வாசு ஓசூரில் பிரச்சாரம்

ஓசூர், ஏப். 6-மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்ஏ.செல்லகுமாருக்கு கை சின்னத்திலும் வாக்கு கேட்டு, நடிகவேல் எம்.ஆர். ராதாவின் பேரனும் நடிகருமான எம்.ஆர்.ஆர். விக்கரம் வாசு பிரச்சாரம் செய்தார்.இந்த பிரச்சாரத்திற்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி எம்எல்ஏ பிரகாஷ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான முருகன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் சுகுமார், யுவராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் மாதேஸ்வரன், மூக்கண்டப் பள்ளி கிருஷ்ணப்பா, நடராஜ், சிபிஎம் சார்பில் சுரேஷ், மணி, வாசுதேவன், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர் மாதையன், தி.க. வனவேந்தன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தர்கா, லால், ஜூஜூ வாடியிலும் பிரச்சாரம் நடைபெற்றது.மணி, ஜோதியப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். சேதுமாதவன், வாசுதேவன், சுரேஷ் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பீட்டர், சீனிவாசன், நாகேஷ்பாபு, திமுக அவைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஓசூர் அசோக் லே லண்டு தொழிற்சாலைகள் முன்பு நடந்த பிரச்சாரத்தில் திமுக கூட்டணிக்கு அனைத்து தொழிலாளர்களும் உற் சாக வரவேற்பளித்தனர்.

;