தனியார் மயத்திற்கு எதிராக மின் ஊழியர்கள் பிரச்சாரம்
மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பி னர் கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் நடத்தினர். மின்சார வாரியத்தை படிப்படியாக தனியார் மயமாக்கும், நடவடிக்கையை கைவிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டரை வீடு களுக்கு பொறுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் திங்களன்று (மார்ச் 3), கும்மிடிப்பூண்டி பஜாரில் துண்டு பிர சுரங்களை பொது மக்கள் மத்தியில் வழங்கி பிரச்சாரத்தை துவங்கினர். பின்னர் நத்தம், மங்காவரம், பெத்திக்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர்ஆர்.ரவிக்குமார், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ஜெயக்குமார், அருள்நாதன், எஸ்.முருகவேல், வடக்கு திட்ட செய லாளர் டி.சந்திரசேகர், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்ட தலைவர் இ.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.