tamilnadu

img

காலி பணியிடங்களை நிரப்ப மின்ஊழியர் மாநாடு வலியுறுத்தல்

காலி பணியிடங்களை நிரப்ப  மின்ஊழியர் மாநாடு வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ஜூன் 15 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கள்ளக்குறிச்சி கிளை 4 வது மாநாடு திருக்கோவிலூர் ஆஸ்பிடல் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று வட்டத் தலைவர் கே. விஜய குமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பி.விருத்தகிரி ஏற்றி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் கே.சலீம் வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.செந்தில் மாநாட்டை துவக்கிவைத்து பேசி னார். வேலை அறிக்கையை வட்டச் செயலாளர் கே  .சீனிவாசன் சமர்ப்பித்தார். வரவு செலவு அறிக்கை வட்டப் பொரு ளாளர் எஸ்.வெங்கடேசன் வாசித்தார்.  மாநாட்டின் தமிழ்நாடு மின்வாரியத்தில் கணக்கிட்டுப் பணியில் உள்ள 4000 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,களப்பணியில்  காலியாக உள்ள 62,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,பகுதி நேர பணியாளர்களை அடையாளம் கண்டு பணி வழங்க வேண்டும்,பிரிவு அலுவ லகங்களில் தேவையான தளவாடப் பொருள்களை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கோட்டச் செயலாளர் எஸ்.கோபிநாத் தீர்மானங்களை முன்மொழிந்தார். நிறைவாக  மாநில செயலாளர் எஸ்.கண்ணன் சிறப்பு ரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு கள்ளக்குறிச்சி கிளையின் தலைவராக கே.சீனிவாசன்,செயலாளராக எம்.சிவக்குமார், பொருளாளராக எஸ். வெங்க டேசன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது, இறுதியில் உளுந்தூர்பேட்டை கோட்டச் செயலாளர் ஆர்.சஞ்சராயர் நன்றி கூறினார்.