tamilnadu

img

விருத்தாசலத்தில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூன் 20- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்துறை ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் விருத்தாசலம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்டச் செயலாளர் என்.தேசிங்கு, இணைச் செயலாளர் என்.கோவிந்தராசு, பூட்ட செயலாளர் ஆர்.ஆறுமுகம் ஆகி யோர் உரையாற்றினர். தமிழ்நாடு மின்துறை ஊழியர் மத்திய அமைப்பின் 18வது மாநில மாநாடு கடலூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு வழங்கிய நிதியை மாநில துணைத் தலைவர் வி.இளங்கோ பெற்றுக் கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகளில் விருத்தாசலம் கோட்டத் தலைவர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் ஏ.புது ராஜன், கே.செந்தில்குமார், ஏ.அருண கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.