tamilnadu

img

மின் இணைப்புகோரி..

புதுச்சேரி முத்தியால்பேட்டை கசாப்புக்காரன்தோப்பு பகுதியில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி (டிச.6) அன்று உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை பொறியாளர்  அலுவலகம் எதிரில் தர்ணா  போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார்.  மூத்த தலைவர் முருகன், பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர்கள் சத்தியா, சரவணன்,  சந்திரா, கிளைச் செயலாளர் கலையரசி உள்ளிட்டோர்  உரையாற்றினர். போராட்ட முடிவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் இன்னும் ஒருவாரத்தில் மின் இணைப்பு வழங்குவதாக தலைமை பொறியாளர் உறுதி அளித்தார்.

;