தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதிஅளிப்பு பேரவை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், தேர்தல் நிதியாக சிஐடியு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் சிபிஎம் இடைக்குழுக்கள் உள்ளிட்டு ரூ.3லட்சத்து 60 ஆயிரம் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஏ.சேகர் ரூ. 50 ஆயிரம் நிர்மல் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். இந்நிகழ்வில், சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.