tamilnadu

img

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு....

சென்னை:
தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய் யப்பட்டார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந் தஸ்தைப் பெறுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற  கட்சி தலைவரை  தேர்ந் தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 7 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டது.கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதமும் நடைபெற்றது. எனவே அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது.

இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் 10 ஆம்‌தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது.இதையடுத்து  திட்டமிட்டபடி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப் பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்களன்று மே 10 காலை தொடங்கியது.மூன்று மணி நேரமாக நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் எடப் பாடி பழனிசாமி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

;