அம்பத்தூர்,ஜூலை 19- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சென்னை மேற்கு கிளை 10 ஆவது மாநாடு தலைவர் டி.கே.சம்பத்ராவ் தலைமையில் அம்பத்தூரில் நடை பெற்றது. சிறப்பு நிலை முகவர் பி.நாராயணன் கொடியேற்றினார். அம்பத்தூர் கோட்டச் செயலாளர் ஜி.குப்பன் வரவேற்றார். ஆவடி கோட்டச் செயலாளர் கே.பிரகாஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை துவக்கி வைத்தார். செயலாளர் எஸ்.தசரதன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், கே.அருள்செல்வன், வடக்கு மண்டலச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் எம்.தனலட்சுமி, சிஐடியு அம்பத்தூர் பகுதிச் செயலாளர் சு.லெனின்சுந்தர், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் என்.அச்சுதன், செயலாளர் பி.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயலாளர் கே.காங்கேயன் உரையாற்றி னார். அண்ணாநகர் கோட்டச் செயலாளர் வி.உமாகாந்தன் நன்றி கூறினார். எஸ்.எஸ்.கணேஷ்ராவ் நன்றி கூறினார். மின்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறைகளையும் தனியார்வசம் ஒப்படைக்காதே, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மின்சார திருத்த மசோதா 2018 - ஐ கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உரு வாக்கி, வேலையில்லா திண்டாட்டத்தை அகற்ற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும், அம்பத்தூர் சிடிஎச் சாலையை விரிவுபடுத்த வேண்டும், அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்றனர்.
புதிய நிர்வாகிகள்
புதிய கவுரத் தலைவராக டி.கே.சம்பத்ராவ், தலைவராக எஸ்.எஸ்.கணேஷ்ராவ், செயலாளராக எஸ்.தசரதன், பொருளாளராக பி.எஸ்.முனியாண்டி உள்ளிட்ட 25 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் குடும்ப நிதியாக ரூ. 5 ஆயிரம் மாநாட்டில் வழங்கப்பட்டது. அதே போல் சிஐடியு செய்திக்கு 50 சந்தா வழங்க ப்பட்டது.