tamilnadu

img

சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண முதல்வருக்கு டி.யூ.ஜே. வாழ்த்து....

சென்னை:
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் சவால்களை திறம்பட எதிர்கொண்டு வெற்றிகாண வேண்டும் என்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  பதவியேற்றுள்ளார். அவருக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் டி.யூ.ஜே. சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு கோரிக்கைகளை டியூஜே சார்பிலும், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் தொடர்ந்து  வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் 95 சதவீத கோரிக்கைகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என நம்பிக்கையூட்டி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதற்காக மீண்டும் இத்தருணத்தில் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த கோரிக்கைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பத்திரிகையாளர் பாதுகாப்புச்சட்டம்
இத்துடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக டி.யூ.ஜே உள்ளிட்ட அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டுவரும் “பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை” நிறைவேற்றிட வேண்டுமாறு கேட்டுக்கொள் கிறோம். கடந்த 2020 நவம்பர் 8 ஆம் தேதி சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழன் டி.வி.யின் இளம் செய்தியாளர்மோசஸ் குடும்பத்திற்கு உரிய நிதி உதவியையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டுமாய் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக தாக்கிவரும் சூழலிலும், பல சவால்களுக்கு மத்தியிலும் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், இவைகளை திறம்பட எதிர்கொண்டு வெற்றி காணவேண்டும் என்றும், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மேம்படுத்தி இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;