வெப்பம் அதிகரித்ததால் எலுமிச்சை விலை கடும் உயர்வு
சென்னை,மே 8- தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் அளவு 104 டிகிரி வரை பதிவாகி வருகிறது.பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் அலுவலகம் உள்ளிட்ட வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீர்ச்சத்து அதிகம் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் பழங்களில் முதன்மையானது எலுமிச்சை பழம். கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக எலுமிச்சை தேவை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. நாள்தோறும் இல்லத் தரசிகள் காய்கறிகளுடன் எலுமிச்சை பழங்களை அதி களவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது. இதனால் எலுமிச்சைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூர், ராஜம்பேட்டை, கலிகிரி ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 8 லாரிகளில் சுமார் 80 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரகத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படு கிறது. அதே நேரத்தில் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பேருந்து ஓட்டுநர் மீது பாட்டில் வீச்சு
சென்னை, மே 8- தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்து (தடம் எண் 44) செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. பேருந்தை வேல்முருகன் (52) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது பேருந்தில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். இதை பார்த்த ஓட்டுநர் படியில் தொங்காதே உள்ளே வா எனக் கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருக்கும் வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாலிபர் இறங்கி சென்றுவிட்டார்.
அதைத்தொடர்ந்து பேருந்து பிராட்வே பேருந்து நிலை யம் சென்றுவிட்டு மீண்டும் தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்துக்கு புறப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்து வமனை அருகே வந்தபோது, மர்ம நபர் ஓட்டுநர் மீது காலி பாட்டிலை வீசியுள்ளார். இதனால் ஓட்டுநரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டு வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். ஓட்டுநர் வேல்முருகன் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.