tamilnadu

நீதிபதி, கல்வியாளர்கள் குழுவை அமைத்து பல்கலைக் கழகத்தை நடத்த வேண்டும்

சென்னை, மார்ச் 4 - ஓய்வுபெற்ற நீதிபதி, அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து பல்கலைக் கழகங்கள்  சிறப்பாக செயல்பட தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள  அறிக்கையில், காவி ஆட்சி ஆளுநர்கள், வேந்தர்கள் என்ற வாய்ப்பினைப் பயன் படுத்தி, காவிக் கொள்கையாளர்களைக் தேடி துணைவேந்தர்களாக நியமிக்கும் மரபு மீறிய செயலை செய்தனர். இதனால் சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்டு பல பல்கலைக் கழகங்களில் நிர்வாக குளறு படி நீடிப்பது மிகப்பெரிய அவலமாகும்.

சென்னைப் பல்கலைக் கழகத்தை காவி மயமாக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளால் தற்போது சென்னைப் பல்கலைக் கழகத் திற்க சிக்கல் உருவானது. இதனை தமிழக அரசு தலையிட்டு சரி செய்து, வங்கி  கணக்குகளை விடுவித்துள்ளது. சென்னைப் பல்கலைக் கழகம் உள்ளிட்டு பிற பல்கலைக் கழகங்களில் நிலவும் பிரச்ச னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி, அனுபவமும், பரந்த உள்ள மும் உள்ள கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைத்து, குறிப்பிட்ட கால வரையறை க்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அரசு உத்தரவிற்குக் கீழ்படியாமை, குற்ற வாளிகளை ஆளுநர் காப்பாற்றிடும் அரசிய லில் அதீதம் நடைபெறுகிறது. உயர்கல்வி  மாணவர்களின் கல்வி இப்படி சீரழிக்கப் படுவது எவ்வகையில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.